கூட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் ஆட்சிநடாத்த முடியாது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு தேவையான வகையில் ஆட்சி செய்ய அரசாங்கம் தயாரில்லை என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தேவையான வகையில் அமைச்சரவை தீர்மானங்களை எடுப்பதற்கோ ஆட்சி நடத்துவதற்கோ தயாரில்லை. அரசாங்கத்தின் பிரதானி ரணில் விக்ரமசிங்கவேயாகும், எனவே கொள்கைகளையும் அவரே வகுப்பார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது உண்மையே, எனினும் அவர்களுக்கு தேவையான வகையில் ஆட்சி நடத்தப்படும் என பிரச்சாரம் செய்வது ஆபத்தானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு பொறிமுறையின் அடிப்படையில் அமைச்சரவை தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.
தேவை என்றால் இந்த அரசாங்கத்தை எனக்கு தேவையான வகையில் நடத்துகின்றேன் என என்னாலும் கூற முடியும். எங்களுக்கும் நாடாளுமன்றில் 6 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

எனினும் நாம் இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் மட்டுமேயாகும், எமக்கு நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே நோக்கமாக உள்ளது.

இனவாதத்தை தூண்டவோ நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ எங்களுக்கு அவசியமில்லை.

எமது அரசாங்கத்தின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும், அவரது கொள்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம் என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.