வவுனியாவில் மதுபானசாலை விவகாரம் நகரபிதா அறிவிப்பு!
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு நகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரபிதா இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபைக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பரதலிங்கம் உரையாற்றுகையில் குறித்த மதுபானசாலையை அகற்றுவது தொடர்பாக உரையாற்றினார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே வவுனியா நகரபிதா கௌதமன் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த மதுபானசாலையை அகற்றுவதற்கு சபை நிச்சயமாக ஓர் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பதுடன், குறித்த மதுபான சாலை அமைந்துள்ள கட்டிடத்தில் மதுபானசாலைக்கு மேல் உள்ள பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் குறித்த கட்டட உரிமையாளர் வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்தச் செயற்பாடானது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்பதுடன், எமது சமூகத்தைச் சீரழிக்கும் செயல்பாடாகவே தெரிகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என நகரபிதா கௌதமன் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபைக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பரதலிங்கம் உரையாற்றுகையில் குறித்த மதுபானசாலையை அகற்றுவது தொடர்பாக உரையாற்றினார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே வவுனியா நகரபிதா கௌதமன் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த மதுபானசாலையை அகற்றுவதற்கு சபை நிச்சயமாக ஓர் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பதுடன், குறித்த மதுபான சாலை அமைந்துள்ள கட்டிடத்தில் மதுபானசாலைக்கு மேல் உள்ள பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் குறித்த கட்டட உரிமையாளர் வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்தச் செயற்பாடானது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்பதுடன், எமது சமூகத்தைச் சீரழிக்கும் செயல்பாடாகவே தெரிகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என நகரபிதா கௌதமன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை