வீதிகளில் குப்பை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பொது இடங்களிலும், வீதிகளிலும் குப்பைகளை கொட்டுவோரை மடக்கிப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தா.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதச சபையின் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன.

வீடுகள்,கடைகளில் தேங்கும் கழிவுப் பொருள்களை இரவு வேளைகளில் வீதிகளில் வீசி விட்டு செல்கின்றனர்.

குப்பைகளை கொட்டுவோர் நல்லூர் பிரதேச சபையினால் வீதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளில் போடுமாறு கேட்கப்படுகின்றனர்.

இதனை விடுத்து பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோர் இனம்காணப்பட்டால் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.