சுகாதார சீர்கேடு! தொண்டைமானாறு கடற்கரையில்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய அருகாமையிலுள்ள கடற்கரைப்  பகுதியில் நெகிழிப்பைகள், பியர் ரின்கள், மதுபானப் போத்தல்கள் என கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.
  அவ்விடத்தின் அசுத்த தன்மை காரணமாக பெற்றோர் சிறுவர்களை அழைத்துவருவது மிகக் குறைந்துள்ளது. கடற்பகுதியும் துப்பரவற்றே காணப்படுகின்றது.
இவ்விடம் புத்தூர் பிரதேச  சபையினதும் கோப்பாய் பிரதேச செயலகத்தினதும்  ஆளுகைக்குட்பட்ட இடமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறார்களுக்கென  அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கம் எந்தவித பாவனையுமற்று காணப்படுகின்றது. இதனைக் கண்காணிப்பதற்காகவும் சீரழிவுகளைத் தடுப்பதற்காகவும் கடமையில் இருந்த பொலிசாரும் கண்டுகொள்ளாமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்களுக்கு நோய் தொற்றக்கூடிய அபாயமும் உள்ளதால் இப்பகுதியை அப்பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.