நாம் தனியே தேர்தல் அரசியலுடன் நின்றுவிடக் கூடாது

சிலருக்குத் தேர்தலும், தேர்வும், அது வழியே வரும் அதிகாரங்களும் பதவிகளுமே முக்கியம்.


எம்மைப் பொறுத்தவரையில் எமது கொள்கைகளை வலுவாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது முக்கியம்.

எமது கொள்கைகள் எமது மக்களின் நீண்ட கால நலம் கருதியவை. ஆகவே நாங்கள் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்து அவற்றின் அடிப்படையில் செயற்படுவது முக்கியம்.

நாம் எம்மை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். எமது பயணம் மக்கள் நலம் என்ற இலக்கு நோக்கிய பயணமாக அமைய வேண்டும்.

 அந்தப் பயணமே எமது தனித்துவத்தை உலகுக்குப் பறைசாற்ற வேண்டும்... சி.வி.விக்னேஸ்வரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.