காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே..? 


முள்ளியவளை, வித்தியானந்தா கல்லூரியில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நிகழ்வினை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகைதந்த வேளை, முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோரால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் காணமல்போனோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், சற்று நேரம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது. நாட்டின் ஜனாதிபதியே எங்களை ஏன் கைவிட்டீர்கள்? இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?, போராட்டமே தமிழினத்தின் வாழ்வா? 10 வருட மௌனம் போதும்…. நீதி வேண்டும், வலிந்து காணமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பிய வண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் விசேட பாதுகாப்பு பொலிஸ் மற்றும், விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.