போதைப்பொருளுக்கு எதிராக வவுனியா மாணவர்கள் உறுதிமொழி

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, வவுனியா மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழியினை மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்புவார ஆரம்ப தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது. அத்தோடு, ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட போதை ஒழிப்பு எதிர்ப்பு பிரகடன அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின், போதை ஒழிப்பு தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

இன்று ஆரம்பமான போதை ஒழிப்பு வாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளில் தினமும் ஒவ்வொரு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.