தேசிய அளவிலான ஸ்லிங்ஷாட் போட்டி: தமிழகம் இரண்டாம் இடம்
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்லிங்ஷாட் போட்டியில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மத்தியப்பிரதேரசம் மாநிலம் போபாவின் தேசிய அளவிலான ஸ்லிங்ஷாட் போட்டி நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட், அரியானா, குஜராத், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து கும்பகோணத்தை சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் மத்திய பிரதேசம் முதலிடத்தை தட்டி சென்றது, தமிழகம் 4 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கத்துடன் 2ம் இடத்தை பிடித்தது.
இந்நிலையில், தமிழகம் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை