அணை உடைந்து 9 பேர் உயிரிழப்பு! பிரேசிலில் சம்பவம்!

தென்கிழக்கு பிரேசிலில் இரும்பு தாது சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள அணையொன்று உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த அனர்த்தம் ஏற்பட்ட நிலையில் அதில் சிக்கி சுமார் 300இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்த புருமடின்ஹோ நகர் ஆளுநர், ஒன்பது பேரின் உயிரிழப்பை உறுதிபடுத்தியுள்ளார்.

அணை திடீரென உடைந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரேசிலின் மரியானா நகரில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் அணையொன்று உடைந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.