தென்கொரியா, கட்டாருடனான உறவை சர்வதேச மட்டத்தில் உயர்த்த எதிர்பார்ப்பு!!

கட்டாருடனான உறவை சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.


கட்டார் ஆட்சியாளர் ஷேய்க் தமீம் பின் ஹமட் அல் தானிக்கும், தென்கொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு சியோலில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போதே தென்கொரிய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, இருதரப்பு உறவை பலப்படுத்துதல், பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 22ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் கட்டாரில் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இரு தரப்பிற்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி இல்லம் அறிவித்துள்ளது.

கட்டாருக்கும், தென்கொரியாவிற்கும் இடையே கடந்த 1974ஆம் ஆண்டு இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 45ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கட்டார் ஆட்சியாளரின் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.