சர சர சார காத்து முழுக்க முழுக்க வைரமுத்து எழுதி கொடுத்தார்: இயக்குநர் விளக்கம்

வாகை சூட வா திரைப்படத்தில் இடம் பெற்ற சர சார சார காத்து பாடலுக்கு வரிகள் எழுதியது யார் என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அது குறித்து அந்த படத்தின் இயக்குநர் சற்குணம் விளக்கம் அளித்துள்ளார்.


விமல் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் வாகை சூட வா. இந்த படத்தை சற்குணம் இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசையமைப்பில் வெளியான முதல் திரைப்படம் இது.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக சரசர சாரக் காத்து பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 96 திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ள பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, சரசர சார காத்து பாடலை எழுதியது தான் தான் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பெரிய விவாதமே சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. மேலும் பல பாடலாசிரியர்களுக்கு இது போல நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் சற்குணம் விளக்கம் அளித்துள்ளார். அவர் சமீபத்தில் யூடியூப்பில் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "வாகை சூட வா திரைப்படத்தில் கார்த்திக் நேத்தா ஒரு பாடல் எழுதி இருக்கிறார். போறாளே போறாளே பாடல் அது. அந்த பாடலை அவர் எழுதுவதற்கு முன்னார் இசைக்கு ஏற்ப நாங்கள் டம்மி லிரிக்‌ஸ் எழுதினோம். பின்னர் அது கார்த்திக்கிற்கு அனுப்பப்பட்டது.

அவர் அந்த ட்யூனுக்கு புதிதாக வரிகள் எழுதி அனுப்பினார். நாங்கள் எழுதிய சில வரிகள் அந்த ட்யூனுக்கு ஏற்றார் போல இருப்பதால் சில இடங்களில் அதனையே பயன்படுத்திக் கொண்டோம். ஆனாலும அது கார்த்திக் எழுதிய பாடல் தானே.

அது  போல தான் சர சர சார காத்து பாடலும். அந்த பாடலுக்கு டம்மி லிரிக்சை கார்த்திக் நேத்தா தான் எழுதினார். பின்னர் அது வைரமுத்துவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் முழு ட்யூனுக்கும் அவர் வரிகள் எழுதி தந்தார். பின்னர் இந்த பாடலிலும் டம்மி லிரிக்சை நாங்கள் சேர்த்துக்கொண்டோம்.

இது வைரமுத்துவுக்கே தெரியாது" என்றார். இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருக்கும் வீடியோவை வைரமுத்துவின் மூத்த மகன் மதன் கார்க்கி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தபதிவில், இது போல தனக்கும் நேர்ந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.