நினைவுத்தூபிகள் அமைப்பதற்கான பிரேரணை தோற்கடிப்பு!

வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை அமைப்பதற்கான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

தீருவில் பூங்காவில் ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீண்டும் நிர்மாணிக்கவும், அங்கு வேறு தூபிகள் அமைக்க வேண்டாம் என்ற பிரேரணை சுயேட்சைக்குழு மற்றும் முன்னணி உறுப்பினர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போதே, குறித்த பிரேரணையால் சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. அதனால் பிரேரணை தவிசாளரால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இச்சிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 8 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

இதனால் முடிவு சமநிலையில் இருந்ததால், தவிசாளர் தனது வாக்கினை பிரேரணைக்கு எதிராகப் பதிவு செய்தார். அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.