இறுதிவரை மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராகவே இருப்பார்

இறுதிவரை மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராகவே இருப்பார். அவர் ஒருபோதும் இனிமேல் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆகப்போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


நீர்கொழும்பு விஜயராம வித்தியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் ஒருசிலர் எமது அரசாங்கத்தினை திருட்டு வழியில் கைப்பற்றியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் திருடர்கள் அவர்களால் ஏற்படுத்தப்பட்டதும் திருட்டு அமைச்சரவையே.

இந்நிலையில் நாம் சட்டத்தின் துணைகொண்டு நீதிமன்றத்தின் மூலம் மக்களின் ஆதரவுடன் அந்த திருட்டு அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்களை விரட்டியடித்தோம்.

மக்கள் வாக்களித்து உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பு. அத்துடன் மக்கள் எம்மைத் தெரிவுசெய்ததன் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியதும் அரசியல்வாதிகளான எமது பொறுப்பு” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.