ஓமனில் சித்ரவதைபடும் தாயை மீட்கக்கோரி மனு..!

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியரிடம் இருந்து மீட்டு தரக் கோரி மகன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அம்மன்குளத்தை சேர்ந்தவர் நாகராஜின் மனைவி சாமுண்டீஸ்வரி (43). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அஸ்லாம்கான் என்பவரின் மூலம் சுற்றுலா விசாவில் வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அஸ்லாம்கான் சாமுண்டீஸ்வரியை வேலைக்கு அனுப்ப ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியிடம் ரூ.1.50 லட்சம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியினர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தனது மகன் விக்னேஸிடம் சாமுண்டீஸ்வரி அழைபேசியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது தாயை ஓமன் நாட்டில் இருந்து மீட்டு தருமாறு அவரது மகன் விக்னேஷ் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.