ஈராக்கியர்கள் மூவர் ஜேர்மனில் கைது! தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டம்!!

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஈராக்கியர்கள் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷாஹீன் எஃப்., ஹெர்ஷ் எஃப். மற்றும் ராஃப் எஸ் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனிய மாநில செயலாளர் ப்ரோகே கோஹெலர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் வடக்கு மாநிலமான ஷிலெஸ்விக்-ஹோல்ஸ்டைனில் கைதுசெய்யப்பட்டனர் என அவர் கூறினார்.

இவர்களில் ஷாஹின் எஃப் என்பவர் எப்படி ஒரு குண்டு தயாரிப்பது என்பது பற்றிய வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்ததுடன், வெடிக்க செய்வது தொடர்பாக ஒருவருடன் தொடர்பு கொண்டதாகவும், இதன் பின்னர் பிரித்தானிய அதிகாரிகள் அந்த நடவடிக்கையை தடுத்தனர் எனவும் ப்ரோகே கோஹெலர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஷாஹீன் எஃப் மற்றும் ஹெர்ஷ் எஃப்., வாணவேடிக்கை வெடிகளில் இருந்து பெறப்பட்ட மருந்துத்தூளில் வெடிக்கும் சாதனம் ஒன்றை உருவாக்க முயன்றார்கள் என்றும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.