நீதிமன்றை நாடும் பெரமுன!!
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது.
மாகாணத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக பொதுஜன பெரமுன முன்னணி நீதிமன்றத்தை நாடவுள்ளது. இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-
நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை அரசு நடத்தாவிட்டால் தனது பதவியை துறப்பேன் என்று தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் கூறியுள்ளமை வருந்தத்தக்கது. மக்களின் அடிப்படைய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் போராட வேண்டியுள்ளது. கடந்த அரசில் பல நெருக்கடிகள் காணப்பட்டபோதும் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டன.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது என்பது பொருத்தமற்ற விடயம். தேர்தலை விரைவுபடுத்த கடந்த காலங்களில் அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. கட்சி தலைவர்களுடன் முன்னெடுத்த பேச்சுக்கள் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாகவே அமைந்தது. பேச்சை இனி முன்னெடுப்பதால் எவ்விதமான தீர்மானங்களும் பெற முடியாது.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக பொதுஜன பெரமுன முன்னணியினர் தற்போது நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளனர். அதற்கு தேர்தல்ஆணைக்குழுவின் தலைவரும், ஆணையகமும் ஒத்துழைப்பு வழங்கினால் பெரும் பலமாக காணப்படும்.
மாகாண சபை தேர்தலை பழையமுறையில் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சித் தவிர்த்து பிற கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண சபைத் தேர்தலைப் புதிய முறையில் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்காமல் நவெம்பர் மாதம் வரை இழுத்தடித்து அரச தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதே அரசின் பிரதான திட்டம். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரச தலைவர் தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்பதை அரச தலைவர் உரியகாலத்தில் தீர்மானிப்பார். தற்போது அரச தலைவர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது தேவையற்ற விடயமாகும் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
மாகாணத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக பொதுஜன பெரமுன முன்னணி நீதிமன்றத்தை நாடவுள்ளது. இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-
நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை அரசு நடத்தாவிட்டால் தனது பதவியை துறப்பேன் என்று தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் கூறியுள்ளமை வருந்தத்தக்கது. மக்களின் அடிப்படைய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் போராட வேண்டியுள்ளது. கடந்த அரசில் பல நெருக்கடிகள் காணப்பட்டபோதும் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டன.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது என்பது பொருத்தமற்ற விடயம். தேர்தலை விரைவுபடுத்த கடந்த காலங்களில் அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. கட்சி தலைவர்களுடன் முன்னெடுத்த பேச்சுக்கள் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாகவே அமைந்தது. பேச்சை இனி முன்னெடுப்பதால் எவ்விதமான தீர்மானங்களும் பெற முடியாது.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக பொதுஜன பெரமுன முன்னணியினர் தற்போது நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளனர். அதற்கு தேர்தல்ஆணைக்குழுவின் தலைவரும், ஆணையகமும் ஒத்துழைப்பு வழங்கினால் பெரும் பலமாக காணப்படும்.
மாகாண சபை தேர்தலை பழையமுறையில் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சித் தவிர்த்து பிற கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண சபைத் தேர்தலைப் புதிய முறையில் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்காமல் நவெம்பர் மாதம் வரை இழுத்தடித்து அரச தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதே அரசின் பிரதான திட்டம். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரச தலைவர் தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்பதை அரச தலைவர் உரியகாலத்தில் தீர்மானிப்பார். தற்போது அரச தலைவர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது தேவையற்ற விடயமாகும் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை