அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச உதவி: பிரதமருக்கு வலியுறுத்தல்!!
அவுஸ்ரேலியாவில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச உதவியை கோருமாறு பிரதமர் ஸ்கொட் மொறிசனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டஸ்மேனியா மாநிலத்தின் நிலைமை இன்று (புதன்கிழமை) மிகவும் மோசமடைந்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையிலேயே ஆர்வலர்களின் இந்த அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 500இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
தீப்பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், தம்மையும், தமது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தின் வழிமுறைகளை பின்பற்றுமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். டஸ்மேனியா பிரதமர் வில் ஹெட்ஜ்மன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
காட்டுத்தீயை அடுத்து மாநிலம் முழுவதும் 14 அவசரகால எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை