பாம்பன் ரயில் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம்

பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து ஆரம்பிப்பது குறித்து சோதனை ஓட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதென ரயில்வே  திணைக்களம் அறிவித்துள்ளது.


கடந்த 3 நாட்களாக பாம்பன் தூக்குப்பாலத்தை  திறந்து மூடும் சோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாம்பன் பாலம் வழியாக மீண்டும் ரயில் சேவையை இயக்குவது குறித்து இன்று பயணிகள் இல்லாத ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

இந்த சோதனைக்கு பின்னர் பயணிகளுடன் ரயிலை இயக்குவது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் கடந்த மாதம் 4ஆம் திகதி சேதமடைந்த நிலையில், ராமேஸ்வரம் நோக்கிப்பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து, இந்திய ரயில்வே தலைமை பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.