மட்டக்களப்பில் பெண் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் திருட்டு

மட்டக்களப்பு கல்லடிப் பகுதியில் உள்ள பெண் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி காணொளிக் கெமராக்கள் திருடப்பட்டுள்ளதோடு மேலும் ஒன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் குறித்த அரசியல்வாதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கல்லடி முதலாம் குறுக்கை அண்டி வசிக்கும் லோஜினி மகேந்திரா என்பவரின் வீட்டிலேயே இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 03.20 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதான நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சீசீரீவி கெமராக்களில் இரண்டு அகற்றப்பட்டிருப்பதாகவும், மேலும் ஒரு கெமரா இயங்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறித்த அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.

மேலும் சேதமாக்கப்பட்ட கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அவதானித்த போது, குற்றச்செயல் புரிந்தவரின் நடமாட்டமும், தோற்றமும் தெரிவதாக குறித்த முறைப்பாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.