கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் – மீண்டும் ரஜினி!

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்தகி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 10 ஆ-ம் திகதி வெளிவரவுள்ளது.

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ரஜினி. ‘பேட்ட’ படப்பிடிப்புக்கு இடையே, கார்த்திக் சுப்பராஜ் கூறிய இன்னொரு கதை பிடித்துவிடவே, அதனை முழுமையாக உருவாக்க கூறியுள்ளார் ரஜினி.

இதனால், மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.