சேனாதிராசாவின் மகன் யாழ் .மாவட்ட இளைஞர் அணியின் செயலாளராக தெரிவு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணிக்கான செயலாளராக அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவின் மகன் கலை அமுதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இன்று காலை கட்சித் தலைமையகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா , சரவணபவன் , கட்சியின் பொருளாளர் கனகசபாபதி , நிர்வாக செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் முன்னிலையில் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.
தலைவராக பிருந்தாபன் ( உடுவில் தொகுதி ) , செயலாளராக மாவை சேனாதிராசா கலை அமுதன் ( காங்கேசன்துறை தொகுதி ) , உப செயலாளராக கருணாகரன் குணாளன் ( ஊர்காவற்துறை தொகுதி , தீவகம் ) , உப தலைவர்களாக றேக்கன் ( கோப்பாய் ) , நிதர்சன் (மருதங்கேணி ) , பொருளாளராக தனபாலசிங்கம் சுதர்சன் ( சாவகச்சேரி ) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட இளைஞரணி பொதுக்கூட்டமானது யாழ் .வீரசிங்கம் மண்டபத்தில் விரைவில் நடைபெறுமென்று அறியத் தரப்படுகின்றது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.