ராஜபக்ச குடும்பத்தில் குழப்பம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ச கூறியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக கூறினார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியிருக்கிறார்.

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து இரண்டு சகோதரர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக கூறியிருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பஷில் ராஜபக்சவே பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கியவர் என்றும், இதனால் பஷில் ராஜபக்சவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர் என்றும் பஷிலுக்கு ஆதரவான தரப்பினர் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.