தமிழ் மக்களின் குரலை சொந்த குரலில் கேட்பதாக வடக்கு ஆளுநர்உருக்கம்!!
கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தின் 32 வருட வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் மொழி ஆளுநர் நான். அதனால், தமிழ் மக்களின் அழுகுரலை எனது சொந்தக் குரலில் கேட்கக்கூடியவாறு உள்ளது.
இந்த நியமனத்தில் அரச தலைவரின் ஒரு அரசியல் சமிக்ஞை உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளை இருக்கின்றார்கள். அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பு வதற்கான உரிமை உண்டு. இங்கு கேள்வி என்னவென்றால், அவர்கள் திரும்பி வந்தால் எங்கே தங்கலாம்? அவர்களுக்கு நிலம் தேவை.
பாதுகாப்புத் தரப்பு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் தனியார் மற்றும் அரச காணிகள் 90 வீதமானவை விடுவிக்கப்பட் டுள்ளன.விடுவிக்கப்பட்ட இந்த நிலங்களின் உகந்த பயன்பாட்டிற்காக நாம் திட்டமிட வேண்டும். அத்தோடு இடம்பெயர்ந்த மக்களை இங்கு மீள்குடியேற்று வதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
சிலர் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்கள் மீனவர்கள் என்றால், கடலுக்கு அருகில் நிலங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் சில மூலோபாய காரணங்களுக்காக இராணுவம் கடற்கரையோர நிலத்தை விடுவிக்க முடியாது என்றால், இடம்பெயர்ந்தோர் மாற்று இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.இந்தப் பகுதியில் 65 ஆயிரம் வீடுகள் போரில் சேதமடைந்துள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் கட்டுவதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக இல்லை – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
கருத்துகள் இல்லை