காணாமல்போன மாணவி உயிரிழந்தநிலையில்!!

மஸ்கெலியா – மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா க்ளென்ட்டில் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக குறித்த மாணவி காணாமல்போயுள்ளதாக, குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்டெடுக்கப்பட்ட குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.