நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் கடப்பாடு குறித்து ஐரோப்பா வலியுறுத்தல்!

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கையின் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பிரஸ்சல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 22ஆவது கூட்டத்திலேயே இவ்விடயத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015 ஒக்டோபர் முதலாம் திகதி மற்றும் 2017 மார்ச் 23 திகதி ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தீரமானங்கள் தொடர்பான கருத்துகளை பகிரும் வகையிலும் இந்த கூட்டம் அமைந்துள்ளது.
அத்தோடு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது குறித்தும், இதில் காணப்படும் முக்கியமான சிக்கல்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்தோடு ஜி.எஸ்.பி. பிளஸ் வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இதனூடாக இலங்கை தனது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.