வெண்கரம் மாணவர்களுக்குபுறொஜெக்டர் அன்பளிப்பு!

வெண்கரம் படிப்பக மாணவர்களின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்சார் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்காக புறொஜெக்டர் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.


சுவிற்சர்லாந்து நாட்டில் வதியும் ஈழத்தமிழரான திரு. ரவிச்சந்திரன் (ரவி) குடும்பத்தினர் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான இந்த தொழில்நுட்ப சாதனத்தை அன்பளிப்பாக அனுப்பிவைத்துள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ள, சுவிஸ் புதிய வார்ப்புக்கள் இசைக்குழுவின் இயக்குநரும் வெண்கரம் புலம்பெயர் இணைப்பாளருமான திரு.லோகேஸ்வரன் அவர்கள் ஊடாக மேற்படி சாதனம் வெண்கரம் செயற்பாட்டாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

புதிய வார்ப்புக்கள் இசைக்குழுவின் பாடகரான திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தனது இன்னிசைக் குரலால் புலம்பெயர் தேசத்து உறவுகளை மகிழ்விக்கும் அதேவேளை, ஈழத்திலும் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.