வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!

வடகொரிய தலைநகர் பியோங்கியாங்கில் கண்கவர் மலர்க் கண்காட்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.


வடகொரிய முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல்-இன் பிறந்தநாளான நேற்று (சனிக்கிழமை) மின்னும் நட்சத்திர நாள் என்ற பெயரில், பொது விடுமுறையுடன் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் மலர் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.

இந்த கொண்டாட்டங்களின்போது, கிம் ஜாங் இல்-ன் தந்தையும், வடகொரியாவின் முதல் தலைவருமான கிம் உல் சுங்கின் நினைவும் போற்றப்படுகிறது.

இதனையொட்டி, தலைநகர் பியோங்கியாங்கில், மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இந்த மலர்க்கண்காட்சியை, பல்வேறு வகைகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மலர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை காண சிறுவர்கள் பெரியோர்கள் என பலரும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.