கனரக ஆயுதங்களால் முடியாததை கடதாசி மட்டைகளினால் சாதிக்க முடியுமா? – துளசி!!

கனரக ஆயுதத்தை வைத்து சண்டை பிடித்த போதே இராணுவத்தை வெளியேற்ற முடியாமல் போய்விட்டது தற்போது கடதாசி மட்டைகளினால் அதை சாதிக்க முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்தார்.

 ”விக்னேஸ்வரன் ஐயாவும் அல்லது அவர் வகுத்த பாதையில் செல்வபர்களும் இந்த தமிழினத்தை மீளவும் ஒரு கொதி நிலைக்கு இட்டு செல்வார்களோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகின்றது.

விக்னேஸ்வரன் ஐயா,  கஜேந்திர குமார் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் சுதந்திர தினத்தில் இராணுவமே வெளியேறு என்று காட்போட்களில் எழுதி பிடித்து கொண்டு இருக்கிறார்கள்.

இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் முழு கனரக ஆயுதத்தை வைத்து சண்டை பிடித்த போதே அவர்களை வெளியேற்ற முடியாமல் போய்விட்டது. தற்போது இவர்கள் காட்போட் மட்டைகளுடன் போராடினால் அவர்களை வெளியேற்ற முடியாது என்பதை அவர்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

இன்று இந்த சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்தவர்கள் கடந்த காலங்களிலே நாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றார்கள் ஏன் கடந்த 5 வருடங்களாக மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் இருந்திருக்கின்றார் ஏன் அந்த காலத்தில் அவர் கரிநாளாக சுதந்திர தினத்தை பிரகனப்படுத்தவில்லை தற்போது இளையவர்களை சூடாக்கி அரசியல் இலாபம் அடைகின்றார்கள். இவ்வாறான சுயநலச் சிந்தனைகளை மக்கள் உணர்ந்து வருகின்றன்றார்கள். எதிர்காலத்தில் தங்களது பதிலை அளிப்பார்கள்” என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.