கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு நீதியரசர் சம்பத் அபேகோன் தலைமையில் சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்தமைக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ததாக தலைமை நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்தார்.
எனினும் அந்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்ததாக விஷேட நீதாய மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி சம்பத் அபேகோன் திறந்த மன்றில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு நீதியரசர் சம்பத் அபேகோன் தலைமையில் சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்தமைக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ததாக தலைமை நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்தார்.
எனினும் அந்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்ததாக விஷேட நீதாய மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி சம்பத் அபேகோன் திறந்த மன்றில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை