உதயமானது ‘தமிழ் மக்கள் இணையம்’ கட்சி!!

இளைஞர்களுக்கான புதிய அரசியல் களத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் மக்கள் இணையம் என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் தலைமையில் இக்கட்சி தொடங்கப்பட்டது.

இதன் அறிமுக நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இக்கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குருபரன் நியமிக்கப்பட்டுள்ளதோடு, பொதுச் செயலாளராக முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.

அத்துடன் தேசிய அமைப்பாளராக ரொஷான் கணேஸ், கொழும்பு மாவட்ட அமைப்பாளராக ரவிபிரகாஷ்  மற்றும் மகளிர் இணையத் தலைவியாக மாலினி ரவிபிரஹாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தக் கட்சியானது தேர்தல் அரசியலை நோக்காகக் கொண்டதாக செயற்படாது என இக்கட்சியின் தலைவர் சண்.குகவரதன் தெரிவித்தார்.

அத்துடன் இளைஞர்களுக்கான புதிய அரசியல் களத்தை ஏற்படுத்தி அதனை சரியாக வழிப்படுத்தி மக்கள் புரட்சித் தெளிவினை ஏற்படுத்தும் ஒரு கட்சியாக இது செயற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் இணையம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.