இணை அனுசரணையில் இருந்து விலக இலங்கை தீர்மானம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலக இலங்கை தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் விலகுவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டு பங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

இந்த தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.  நாங்கள் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காட்டுவோம்.

எமது ஆயுதப்படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளாலேயே மிக மோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. ஜெனீவா அமர்வுகளில் எமது நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையின் நிலைப்பாட்டில் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து தற்போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.