வவுனியாவில் சட்டவிரோதமாக மண் அகழ்வு – இருவர் கைது!

வவுனியாவில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு கடத்த முற்பட்டவர்கள் விஷேட அதிரடிப்படையின் அதிரடி நடவடிக்கையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கமுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அப்பகுதிக்கு சென்ற மடுகந்தை விசேட அதிரடிபடையினர் மண் அகழ்வில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் மற்றும் டிப்பர் வாகனம் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவரை கைதுசெய்த விசேட அதிரடி படையினர் இரட்டை பெரியகுளம் போலிஸாரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் ஆயர்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.