இலங்கை தப்பிக்க முயற்சி!- நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு!!

நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிக்க முயற்சிப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை மேலும் கால அவகாசம் கோரவுள்ளமை மற்றும் இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ”பேரவையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த விவாதத்துக்கு முன்னர், அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார்.

30ஃ1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இலங்கை அரசு இன்னும் தாமதிக்கும் தந்திரத்தைக் கையாள்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று, இலங்கையில் போரின்போது நடந்த குற்றங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, மன்னித்து மறந்து விட வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியில், மிக முக்கியமான வாக்குறுதிகளான நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் காணவில்லை என்று தெரிவித்த அவர், பொறுப்புக்கூறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியபோதிலும், நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மாத்திரம் அமைச்சரவையிடம் அனுமதி கோரியிருப்பது அந்த வாக்குறுதியில் இருந்து இலங்கை பின்வாங்குவதாக அமைகிறது என்றும் கூறினார்.

அத்துடன், இலங்கையில் நடந்த பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கொடூரமான குற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.