5G ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும்? - சாம்பிள் காட்டிய ஒன்பிளஸ்!!

5G நெட்வொர்க் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் சந்தையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன 5G ஸ்மார்ட்போன்கள்.
சாம்சங், எல்ஜி, ஷியோமி என பல நிறுவனங்கள் தொடர்ந்து அவர்களின் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் கூடிய விரைவில் ஒன்பிளஸ் நிறுவனமும் இணையவிருக்கிறது. கடந்த வருடமே எங்களது அடுத்த போனில் 5G நிச்சயம் இருக்கும் என அறிவித்திருந்தது ஒன்ப்ளஸ் நிறுவனம். அதற்கேற்ற வகையில் தற்பொழுது பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்வில் அதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளது ஒன்பிளஸ். இந் நிகழ்வில் ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட்போனின் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவம் இன்னும் முழுமையாகவில்லை என்பதால் இதன் தோற்றம் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை. என்றாலும் இதில் குவால்காமின் புதிய  புராஸசரான Snapdragon 855 பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறது ஒன்பிளஸ். இறுதியாக வெளியான  6T ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால், தற்பொழுது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாதிரியில் நாட்ச் காணப்படவில்லை என்பதால் முன்புற கேமராவுக்கு மாற்று வழிகள் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.