இலங்கை தமிழர்ருக்கு எப்போது சுதந்திரம்???.

(த.குகதாஸ்)
சுதந்திரம் சுதந்திரம் இலங்கை திரு நாட்டிற்கு சுதந்திரம்.
பேசுபொருள் அற்று பேசும் நிலை மறந்து ஜதியற்று நிக்கும் தமிழனுக்கு எப்போது சுதந்திரம்.??


ஆறடி சுவற்றுக்குள் அடைபட்டு இருக்கும் தமிழ் அரசியல் கையிதிகளுக்கு எப்போது சுதந்திரம்???
முள் கம்பி வேலிக்குள் முடங்கியிருக்கும் தமிழர் நிலங்களுக்கு எப்போது சுதந்திரம்????

அம்மா உயிரற்று அப்பா அடைபட்டு பிள்ளைகளோ ஆதரவற்று. அமைதிதேடும் பிஞ்சு மழழைக்கு எப்போது சுதந்திரம்???
நின்மதி எமக்கில்லை எங்கள் நிலம் எமக்கு வேண்டும். இரணப்பாலையில் வீதியில் உறங்கும் எம்தமிழ் உறவிற்கு எப்போது சுதந்திரம்?????

அயல் நாட்டு தலைவர்கள் அதிதிகளாய் வருகிறார்கள்.
ஐநாவும் அப்பப்போ சுதந்திரம் பேசைகிறது.
காலிமுகத் திடலில் கலைகட்டும் அலங்காரம்.
அனைத்தும் நடக்கிறது ஆனாலும் எமக்கு எப்போது சுதந்திரம்????

ஆட்சிக்கு வரும்போது எனது தொப்பிள் கொடி உறவுகளே.
நாம் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளே.
அரைகுறை தமிழில் அரங்கத்தில் கதறும் ஐயாமார்களே.
காணாமல் தொலைந்த உங்கள் தொப்பிள் கொடி உறவுகள் எங்கே???
ஏக்கத்துடம் போராடும் உறவுகளுக்கு எப்போது சுதந்திரம்??????

வீடு இருக்கு காணி இருக்கு ஆனபோதும் படைமுகாங்கள் சூழ்ந்திருக்கு.
அகதிகளாய் புறப்பட்டு ஆண்டுகள் பல ஆனபோதும் அடிமைகளாய் வாழும் தமிழ் இனத்திற்கு எப்போது சுதந்திரம்???????

யுத்தம் யுத்தம் எனும் கொடிய சத்தத்தில் குடிமனைகள் இழந்து நிற்கெதியற்று முகாங்களில் முடங்கி இருக்கும் மக்களுக்கு எப்போது சுதந்திரம்?????
அகதிகளை அயல் நாட்டில் அவல வாழ்வை தொடரும் எம் தொப்பிள் கொடி உறவுகள் தாயக மண்ணில் அச்சம்மின்றி வாழ்வதற்கு ஆரையா கொடுப்பார் சுதந்திரம்?????

அடிமை வாழ்க்கை எமக்கு வேண்டாம்.
அடிமைகளாய் எம்மை மாற்றவேண்டாம்.
ஆயிரம் ரூபாய் சம்பழம் தாருமையா.
அட்டைகள் தொல்லை ஆனாலும் பறிக்கிறோம் தேயிலை கொளுந்தினை.
நாட்டிற்கு முதுகெலும்பாய் உளைக்கிறோம் நாளாந்தம் ஆனபோதும் எமக்கு எப்போது கிடைக்கும் சுதந்திரம்??????

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.