நுவரெலியாவில் 9 இந்தியர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நுவரெலியா – பொரலந்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மற்றும் 42 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.