யாழ் பேருந்து நிலையத்துக்கு,முன்பாக இடம்பெற்ற கவனவீர்ப்பு போராட்டமும் கையெழுத்து சேகரிப்பும்!

கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து “வடக்கு பகுதிகளில் இன்று வரை படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்க அதிகாரி களுக்கு அழுத்தம் கொடுப்போம் என்பதை வலியு றுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பரந்தன் ஊடாக கிளிநொச்சியை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பா ணத்தை இன்று வந்தடைந்தது. பூநகரி ஊடாக மன் னார், வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு வரை ஊர்வலம் இடம்பெறும். எதிர்வரும் இரண்டாம் திகதியன்று கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை