கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சொகுசு பேருந்து பாரிய விபத்து!!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி  எ-9 பிரதான வீதியில் சென்ற சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எ-9 பிரதான வீதியில் தரித்து விடப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று சடுதியாக வீதியில் நுழைந்துள்ளது. இதனையடுத்து சொகுசு பேருந்தின் சாரதி பேருந்தை திருப்ப முயற்சித்தபோது வீதியிலிருந்து விலகிய பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

https://www.tamilarul.net/
இந்த சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார்.
https://www.tamilarul.net/
மேலும் பேருந்தின் சாரதி உள்ளட்ட 4 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். மேலதிக விசாரனை பொலிசார் மேற்கொள்வதாக குறிப்பிட்டனர்.
https://www.tamilarul.net/
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.