2019 நாடாளுமன்றத் தேர்தல் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பேச்சுவார்த்தைக்குழு!

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் இடம்பெறுவோர்

1. அ. கணேசமூர்த்தி -- கழகப் பொருளாளர்
2. மல்லை சி.இ. சத்யா -- கழகத் துணைப் பொதுச்செயலாளர்
3. புலவர் சே. செவந்தியப்பன் -- அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்
4. டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் -- ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்
5. டாக்டர் க. சந்திரசேகரன் -- உயர்நிலைக்குழு உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பின்பேரில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்குழு நாளை 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்கிறது.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
21.02.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.