இந்த வருடத்தில் புதிய அரசு உருவாக்கப்படும்-மைத்திரி!
புதிய அரசு இந்த ஆண்டு கட்டாயம் உருவாக்கப்படும். அந்த அரசைப் பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்காது, நாட்டை நேசிக்கின்ற, நாட்டினுள் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து எதிர்காலத்தை வளமாக்குவதற்குரியதான அரசை அமைக்கவேண்டும். இந்த அரசை அமைப்பதற்கு ஒவ்வொருவரும் தமது மனச்சாட்சியிடம் கேள்வி எழுப்பவேண்டும்.
இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் தலைமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டுக்குத் தேவையான விரிவான தேசிய சக்திகளை உருவாக்குவதற்கு நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்று திரள வேண்டும். நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய அரசையும் புதிய வேலைத்திட்டமொன்றையும் புதிய தேசிய சக்தியொன்றையும் உருவாக்குவதற்கு முற்போக்காளர்களும் தேசப்பற்றுடையவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசு உருவாக்கப்படும் என்றும் அந்த அரசைப் பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்காது, நாட்டை நேசிக்கின்ற, நாட்டினுள் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து எதிர்கால சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு தகுந்த அரசை அமைப்பதற்காக அனைவரும் தத்தமது மனச்சாட்சியிடம் கேள்வியெழுப்ப வேண்டும். தற்போது ஐக்கிய தேசிய கட்சியை அந்தக் கட்சியின் தலைமைத்துவம் இயக்கவில்லை.
பாதகமற்ற புதிய அரசு நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்துள்ளது. அவ்வாறான அரசை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது.
நாடு முகம் கொடுத்திருக்கும் பெரிய கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதுடன், நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கும் நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் தலைமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டுக்குத் தேவையான விரிவான தேசிய சக்திகளை உருவாக்குவதற்கு நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்று திரள வேண்டும். நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய அரசையும் புதிய வேலைத்திட்டமொன்றையும் புதிய தேசிய சக்தியொன்றையும் உருவாக்குவதற்கு முற்போக்காளர்களும் தேசப்பற்றுடையவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசு உருவாக்கப்படும் என்றும் அந்த அரசைப் பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்காது, நாட்டை நேசிக்கின்ற, நாட்டினுள் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து எதிர்கால சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு தகுந்த அரசை அமைப்பதற்காக அனைவரும் தத்தமது மனச்சாட்சியிடம் கேள்வியெழுப்ப வேண்டும். தற்போது ஐக்கிய தேசிய கட்சியை அந்தக் கட்சியின் தலைமைத்துவம் இயக்கவில்லை.
பாதகமற்ற புதிய அரசு நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்துள்ளது. அவ்வாறான அரசை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது.
நாடு முகம் கொடுத்திருக்கும் பெரிய கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதுடன், நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கும் நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை