இந்த வரு­டத்­தில் புதிய அரசு உரு­வாக்­கப்­ப­டும்-மைத்திரி!

புதிய அரசு இந்த ஆண்டு கட்­டா­யம் உரு­வாக்­கப்­ப­டும். அந்த அர­சைப் பிரி­வி­னை­வாத வல­து­சாரி சக்­தி­க­ளி­டம் கைய­ளிக்­காது, நாட்டை நேசிக்­கின்ற, நாட்­டி­னுள் காணப்­ப­டும் பிரச்­சி­னை­க­ளைக் கண்­ட­றிந்து எதிர்­கா­லத்தை வள­மாக்­கு­வ­தற்­கு­ரி­ய­தான அரசை அமைக்­க­வேண்­டும். இந்த அரசை அமைப்­ப­தற்கு ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது மனச்­சாட்­சி­யி­டம் கேள்வி எழுப்­ப­வேண்­டும்.
இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.
கொழும்பு நகர மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்ற ஐக்­கிய மக்­கள் முன்­ன­ணி­யின் 22ஆவது வரு­டாந்த பொதுச்­சபை கூட்­டத்­தில் தலைமை அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். இது தொடர்­பில் அரச தலை­வர் ஊட­கப் பிரிவு அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
நாட்­டுக்­குத் தேவை­யான விரி­வான தேசிய சக்­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கு நாட்டை நேசிக்­கும் அனை­வ­ரும் ஒன்று திரள வேண்­டும். நாட்­டின் எதிர்­கா­லத்­துக்­காக புதிய அர­சை­யும் புதிய வேலைத்­திட்­ட­மொன்­றை­யும் புதிய தேசிய சக்­தி­யொன்­றை­யும் உரு­வாக்­கு­வ­தற்கு முற்­போக்­கா­ளர்­க­ளும் தேசப்­பற்­று­டை­ய­வர்­க­ளும் பொறுப்­பேற்க வேண்­டும்.
இந்த வரு­டத்­தில் கட்­டா­ய­மாக புதிய அரசு உரு­வாக்­கப்­ப­டும் என்­றும் அந்த அர­சைப் பிரி­வி­னை­வாத வல­து­சாரி சக்­தி­க­ளி­டம் கைய­ளிக்­காது, நாட்டை நேசிக்­கின்ற, நாட்­டி­னுள் காணப்­ப­டும் பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து எதிர்­கால சுபீட்­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தகுந்த அரசை அமைப்­ப­தற்­காக அனை­வ­ரும் தத்­த­மது மனச்­சாட்­சி­யி­டம் கேள்­வி­யெ­ழுப்ப வேண்­டும். தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியை அந்­தக் கட்­சி­யின் தலை­மைத்­து­வம் இயக்­க­வில்லை.
பாத­க­மற்ற புதிய அரசு நாட்­டின் எதிர்­கால தேவை­யாக அமைந்­துள்­ளது. அவ்­வா­றான அரசை உரு­வாக்­கு­வ­தற்கு விரி­வான தேசிய கூட்­ட­ணி­யொன்று இல்­லா­மல் அந்த வெற்­றியை அடைய முடி­யாது.
நாடு முகம் கொடுத்­தி­ருக்­கும் பெரிய கடன் சுமை­யி­லி­ருந்து நாட்டை விடு­விப்­ப­து­டன், நாட்­டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­று­வ­தற்­கும் புதிய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தற்­கும் நாட்டை நேசிக்­கும் அனைத்து சக்­தி­க­ளும் ஒன்று திரள வேண்­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.