விடைபெற்றார் கிம்!!

வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்கும் பிரதான எதிர்பார்ப்புடன் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க வியட்நாம் சென்ற வடகொரிய தலைவர் கிம்  ஜோங் உன் வியட்நாமில் இருந்து விடைபெற்றுள்ளார்.

ரயில் மூலமாக வியட்நாம் செல்லவுள்ள தலைவர் கிம்மை வழியனுப்ப வியட்நாம்  டொங் டேங்  ரயில் நிலையம் முன்பாக பெருந்திரளானோர் கூடியிருந்தனர்.

வியட்நாமை விட்டு வெளியேறும் முன்பதாக வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

அமெரிக்க -வடகொரியா உச்சிமாநாடு கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதி வியட்நாமில் இடம்பெற்றிருந்தது. வட கொரியா தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஈடாக அந்நாட்டின் பொருளாதாரத்  தடைகளை நிவர்த்தி செய்வதற்கு அமெரிக்க இணங்கியிராத நிலையில் ஒப்பந்தம் எதனையும் மேற்கொள்ள முடியாமல் போனமை  குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.