பூமியை நெருங்கும் ஆபத்து – எச்சரிக்கும் நாசா!!

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருபோதும் இல்லாத வெப்பநிலை பூமியில் பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளி ஆய்வுகளுக்கான நாசா Goddard நிறுவனத்தின் இயக்குனர் கவின் ஷிமித், ‘ கடந்த ஐந்து வருடங்களும் கடும் வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. இந்த வெப்பத்தை 19 ஆம் நூற்றாண்டு பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

நாசா, தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூற்றுப்படி, 1880 இலிருந்து 2015, 2016 மற்றும் 2017 க்குப் பின், நான்காவது வெப்பமான ஆண்டை 2018 குறிக்கிறது.

2016 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெப்பநிலையானது எல் நினோவால் அதிகரிக்கப்பட்டது.

எல் நினோ என்பது ஒரு இயற்கை நிகழ்வு ஆகும், இது ஒவ்வொரு வருடமும் உலகளாவிய வானிலை மண்டலங்களை சீர்குலைப்பதுடன் வளிமண்டல பசிபிக் பெருங்கடலில் இருந்து வளிமண்டலத்திற்கு வெப்பத்தை வெளியிடுகிறது.

2018 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ, தென் ஆபிரிக்காவில் வறட்சி மற்றும் கேரளாவில் வெள்ளம் என வானிலை உச்ச எல்லையானது காணப்பட்டது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. ஆபத்தானது என்று கருதுகின்ற அளவிற்கு பூமி அதிக அளவிலான வெப்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது“ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.