ஒரு பௌத்த குடும்பம் வாழ்ந்தாலும் அது பௌத்த கிராமமே – வர்த்தமானி தயாராகிறது!!

ஒரு பௌத்த குடும்பம் வாழ்ந்தாலும் அந்தக் கிராமத்தை பௌத்த கிராமமாக அறிவித்து வா்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலகங்களிற்கும் அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் எந்தவொரு கிராமத்திலும் பௌத்த சின்னங்களோ அல்லது பௌத்த மதத்தவர்களோ வாழ்ந்தால் அக் கிராம சேவகர் பிரிவு பௌத்த கிராமங்களாக கருதப்படும். அதன் பிரகாரம் மாவட்டந்தோறும் காணப்படும் பௌத்த சின்னங்கள் , பௌத்த குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

போரிற்குப் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் தாயகம் திரும்ப முடியாது தமிழ் நாட்டு அகதி முகாம்களில் வாடும் அதே நேரம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படது அபகரிந்துள்ள நிலங்களில் பௌத்த சின்னங்கள் இரவோடு இரவாக முளைத்தும் வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.