இலங்கை – சீன உறவு வலுப்படும்: சீனத்தூதுவர் தெரிவிப்பு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை, சிறுவர்கள் மூலம் வளர்ப்பது சிறந்தது என இலங்கைக்கான சீனாவின் தூதுவர் (cheng xueyuan) செங் கியூவான் தெரிவித்தார்.


சீன தூதுவராலயத்தின் உதவியுடன் மன்னார் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, தாராபுரம் அல் மினார் வித்தியாலயத்தில் இன்று மாலை (06) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சீனத்தூதுவர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது இங்கு உரையாற்றிய சீனத் தூதுவர், “மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்தமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.

மாணவர்களும் சிறார்களுமே ஒரு நாட்டினது எதிர்கால தூண்கள். அந்த வகையில் மன்னார் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சிறிய உதவியானது வருங்காலத்தில் இந்த மாவட்டத்திற்கு பாரிய உதவிகளை நல்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக பிரார்த்திக்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.