ஆயுதங்களால் பரீட்சை எழுதினோம்..!
அச்சம் மடம் நாணம்
பயிர்ப்பு என நான்கு
குணமே பெண்களுக்கு
என்று பூட்டி வைத்து
ஆணின் கண்ணசைவில்
வார்த்தைகளை முழிங்கிட
வேண்டுமென்று கூறிய
சமூகத்தின் கத்தியில்
ஆயுதம் ஏந்திய மற
பெண்கள் நாம்
போராட்டம் எம்
வாழ்வுநிலையை
மாற்றி இறுக்கி விட்டது
கள தளபதிகளாக
கட்டளை தளபதியாக
ஆயுதங்களால் பரீட்சை
எழுதினோம்
கன்னியர் வீட்டின்
குத்துவிளக்குகள் என்ற
வார்த்தையை கடித்து
குதறி கரத்தில் கைகுண்டுடன்
இரவு நேரத்தில் நிலவுடன்
கவிதை பாடினோம்
பெண்கள் சாந்தமாக
பேசிடவேண்டும் என்ற
கூட்டுக்குள் இருந்து
பாய்ந்து எழுந்து
பெண்புலிகளாகி
சிங்கங்களை வேட்டையாட
இரவும் பகலும்
அலைந்து திரிந்தோம்
ஆம் நாம் பெண்களல்ல
உங்கள் ஆசைகளுக்கு
அடிபணியும் பேதைகள் அல்ல
வீரம் செழிக்க எம்
வேதம் முடியும்வரை
களத்தில் போராடும்
பெண்புலிகள்
ஆயுதம் ஓய்ந்து போனாலும்
எம் எழுத்தாணி எழுந்து
போரிட்டுக்கொண்டே இருக்கும்
மறந்து விடாதீர்கள்
மங்கை இவளென
மருதாணி பூச சொல்லி
பெண்பார்க்க வரவேண்டாம்
அடுக்களைக்குள் இருந்து
அதிரடி குரலுக்கு
பணிந்திடும் பதுமைகள்
அல்ல நாம்
முறத்தால் சிங்கங்களை
விரட்ட கற்றுக்கொண்ட
பெண்புலிகள்
காவியா
07/03/19
00.01
லண்டன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை