ஹூவாவி நிறுவனம் அமெரிக்கா மீது வழக்கு !!

ஹூவாவி நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அந்நிறுவனம் அமெரிக்க நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளது.

ஹூவாவி நிறுவனம் தனது தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ஹூவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய்,  அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக முறைப்பாடு எழுந்தது. மேலும் ஹூவாவி நிறுவனம் மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இதற்கிடையில் ஹூவாவி நிறுவன தலைவரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஷு கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.