ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.


ஜம்மு காஷ்மீர் டிரால் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இரு தரப்புக்கு இடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த கடும் துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், அவர்களது ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அப்பகுதிகளில் இராணுவத்தினரால் தேடுதல் வேட்டை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.