Selfei எடுக்க முனைந்த பெண்ணை தாக்கிய ஜகுவார்!!

அரிசோனாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட விலங்கின காட்சிசாலையில் செல்வி எடுக்க முயற்சி பெண்ணொருவர் எதிர்பாராத தாக்குதல் ஒன்றுக்கு முகம்கொடுக்கிறார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் அவர் நிலைகுழைந்து போகிறார். தன்னை தாக்கியது யார்? எதற்காக தாக்கப்பட்டது? என்று சூதாரிப்பதற்குள் படுகாயமடைந்து வீழ்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் அவருக்கு பழக்க தோஷமாகிப் போன செல்ஃபிதான். யாருடன் செல்ஃபி எடுக்க முனைந்தார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

அது ஜகுவார் எனப்படும் கரும்புலி இனம். மறிப்பு வேலிகளை தாண்டி, மிகவும் கோபத்துடன் இருக்கும் அந்த பெண் விலங்கின் கூண்டிற்கு அருகில் சென்று குறித்த பெண் படம் பிடிக்க முனைந்தமையை அங்கிருந்த சிலர் பார்த்து எச்சரிப்பதற்குள் தாக்குதலுக்கு உள்ளானர்.

ஜகுவாரால் தாக்கப்பட்ட பெண் தனது இடது கையில் கடும் சிராய்ப்பு காயங்களுக்கு உள்ளானதாக விலங்கினசாலையில் உள்ள தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

அதன்பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரிசோனாவில் உள்ள ஃபீனிக்ஸ் எனப்படும் வனவிலங்கு, கடலுயிர் மற்றும் சவாரி பூங்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரும்புலியின் கூண்டு பகுதியில் இருந்து அலறல் சத்தம் கேட்ட போது மீட்புப் பிரிவினர் அங்கு விரைந்து சென்று பெண்ணை மீட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இது அந்த விலங்கின் பிழையில்லை என்பதனால் அதனை கருணைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.