வயல் அறுவடை விழா!!

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் வயல் அறுவடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. வவுனியா, உதவி விவசாயப் பணிப்பாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் இவ்விழா இடம்பெற்றது.


இதன்போது, வவுனியா விவசாயத் திணைக்களத்தில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்ட இயந்திரம் மூலமான விதை நடல், கையினால் விதை நடல் போன்ற முறைகளில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி நெற்செய்கையின் அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இம்முறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் விளைதிறன், நன்மை, தீமைகள், இலாப, நட்டங்கள் குறித்தும் கண்டறியப்பட்டு அதிகாரிகளினால் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பண்ணை முகாமையாளர் கதீசன், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.