யாழில் நீதிக்காண பேரணி மாபெரும் எழுச்சியுடன் நடைபெறுகிறது!(படங்கள்)


தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் அநீதிகளுக்கு, நீதி கோரும் எழுச்சி பேரணி யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து ஆரம்பமானது.


காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமானது.

பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய பேரணி, முற்றவெளி நோக்கி சென்றது. முற்றவெளியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுகிறது.

இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைக்கப்படுகிறது.

இந்த பேரணிக்கு தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் மக்கள் தேசிய முன்னணி உட்பட பல தமிழ் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எவ்.எவ் அமைப்பின் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.